மாலை நேர தென்றலாய் நீ வந்தாய் என்னிடம்
பூ கூட வெட்கமாய் நீ சிரித்தாய் அவ்விடம்
நிலவு கூட ஓரமாய் ஒதுங்கி கொள்ள நேரிடும்
மேகங்கள் யாவும் கூட்டமாய் தூறல் போட வந்திடும்
மலர்கள் தன்னை மெத்தையாய் பறித்து கொள்ள சொல்லிடும்
காட்டு ராஜா சிங்கமும் உன்னையே இருக்க வைத்திடும்
உனக்கு தைக்க ஆடையாய் பட்டுப்பூக்கள் வரிசையில் நின்றிடும்
உன் அழுகை கூட என்னிடம் ஒரு ராகம் பாடி சென்றிடும்
காற்று கூட உன்னிடம் கவிதை பாட வந்திடும்
தங்க மயில்களும் ஆடிடும் தங்கள் கலாபத்தை போர்த்திடும்
பெரு வெள்ளம் வந்திடும் அது சிறு வெள்ளமாய் ஓடிடும்
மின்னல் வந்து காட்டிடும் உன் ஒளியின் அளவை பார்த்திடும்
வானவில் தன்னகத்தே தோன்றிடும் நிறங்களை தானே பொழிந்திடும்
No comments:
Post a Comment