புரட்சி

வாழ வேண்டும் வாழ வேண்டும்
எல்லோரும் இங்கு வாழ வேண்டும்
வளர வேண்டும் வளர வேண்டும்
வின்னை தொட நாம் வளர வேண்டும்
உழைக்கும் கைகள் உயர வேண்டும்
உழவும் விவசாயி ஊரறிய வேண்டும்
 
தண்ணீர் பஞ்சம் இல்லா தமிழகம் வேண்டும்
தஞ்சை நெல்லை தேசிய பயிராக வேண்டும்
மது பாட்டில் இல்லா தெருக்கள் வேண்டும்
எங்கள் பெண்களின் தாலி நிலைக்க வேண்டும்
துட்டு இல்லா பள்ளிகள் வேண்டும்
குழந்தை செல்வங்கள் வானகம் செல்ல வேண்டும்

கொடிகள் இல்லா தெருக்கள் வேண்டும்
தெருக்கள் தோறும் நல்ல சாலைகள் வேண்டும்
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்த வேண்டும்
நிமிர்த்திய நெஞ்சில் உயர்ந்த எண்ணம் நிலைக்க வேண்டும்

No comments:

Post a Comment

காதல்

நினைத்தேன் கோபப்பட்டால் ஏன் என்பதற்குள் ஏன் மறந்தாய் என்றாள் மனம் உருகி போனேன்