அன்பு செல்லமே………
உன்னை பற்றி கவிதை எழுத நினைத்தேன்
வார்த்தைகளே கிடைக்க வில்லை எனக்கு
நிலவை உன் முகத்தோடு ஒப்பிட
தோற்போம் என்றெண்ணி தெறித்து அது ஓட
உன்னை பார்த்து சிங்கம் பயப்படும் என்பதால்
உன் வீரத்தை ஒப்பிட முடியாமல் நான் தவிர்க்க
வானவில்லை பார்த்து உன் நிறத்தை சொல்ல
தான் அதற்கு நிகரில்லை என்று தன்னகத்தே மறைய
உன் குரலை பதிவு செய்ய சிம்பொனியை அழைக்க
அதற்கான தரம் இல்லை என நடையை கட்ட
மேகத்தை பிடித்து உனக்கு மெத்தைகள் தைக்க
உன் மேனி என்னைவிட மென்மை என்று தலை குனிய
உலகில் உள்ள மொழிகளில் எல்லாம் உன் பெயரை எழுத நினைக்க
தமிழை தவிர எங்களால் முடியாது என அவைகள் கம்பளம் விரிக்க
நீ இப்படியே என் கவிதையை ஏற்க
என்றென்றும் வாழ்க வாழ்க
No comments:
Post a Comment