மிருகமாய் இருந்தேன்,
மண்ணை பார்த்தேன் பசுமை வந்தது
பசுமை பார்த்தேன் உணவு வந்தது
நெருப்பை பார்த்தேன் ருசி வந்தது
உடுத்தி பார்த்தேன் மானம் வந்தது
கல்லை பார்த்தேன் ஆயுதம் வந்தது
ஆயுதம் பார்த்தேன் சிற்பம் வந்தது
சிற்பம் பார்த்தேன் வடிவம் வந்தது
வடிவம் பார்த்தேன் எழுத்து வந்தது
எழுத்தை பார்த்தேன் வார்த்தை வந்தது
வார்த்தை பார்த்தேன் மொழி வந்தது
மொழி பார்த்தேன் இனம் வந்தது
இனம் பார்த்தேன் ஜாதி வந்தது
ஜாதி பார்த்தேன் பிளவு வந்தது
பிளவை பார்த்தேன் தனித்து நின்றேன்
தனித்து பார்த்தேன் மீண்டும் மிருகம் ஆனேன்
No comments:
Post a Comment